கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகள் கூட காணாமல் போகும், இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்து வந்தால்

uppu-cash-salt
- Advertisement -

பத்தாயிரம் சம்பாதிக்கும் மனிதனுக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒரு லட்சம் சம்பாதிப்பவருக்கும் கடன் பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கடன் வாங்குகிறார்கள். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் தன்னையும் மீறி ஏதாவது ஒரு பிரச்சனை வருகின்ற பொழுது, அவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இப்படி அவசரத்துக்கு கடன் வாங்கிய பிறகு அதற்கு வட்டி கட்ட முடியாமல், அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எப்பொழுது கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வருவார்கள், சண்டை போடுவார்கள் என்ற அவமானத்தை எண்ணி, எண்ணி ஒவ்வொரு நிமிடத்தையும் நரகமாக கழித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் மாட்டிக் கொள்பவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியாது. வாருங்கள் இந்த கடன் பிரச்சினையை விரைவில் தீர்க்க கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முடிந்தவரை வருகின்ற வருமானத்திற்கு ஏற்ப நமது வாழ்க்கையை வாழ வேண்டும். அல்லது மேலும் முயற்சி செய்து நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும். இன்றைய குழந்தைகளின் கனவுகள் பெரியதாக இருக்கிறது. அவர்களின் வாழ்க்கையாவது நல்ல முன்னேற்ற பாதையில் இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் கல்வி என்பதையே இப்பொழுது காசு கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கிறது. எனவே அதற்கும் அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. ஆகவே பலரும் கடன் வாங்கத்தான் வேண்டி இருக்கிறது. இந்த கடனை விரைவாக அடைக்க நாம் பல முயற்சிகள் செய்கிறோம். ஆனால் அவை தடைபட காரணம் நமது இல்லத்தில் சுப தேவதைகள் குடியிருப்பதுதான்.

இவ்வாறு அசுப தேவதைகளை விரட்டி விட்டு, வீட்டிற்குள் சுப தேவதைகள் நுழைந்து விட்டால் நமது பிரச்சினைகள் அனைத்தும் உடனே தீர்ந்து விடும். இதற்காக முதலில் நான்கு அல்லது ஐந்து கிலோ கல் உப்பைக் வாங்கிக்கொள்ள வேண்டும். பிறகு அடுப்புக் கரியை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஞாயிற்று கிழமை, திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை இவை மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில், வீட்டை சுத்தம் செய்து முடித்த பிறகு, சுத்தமாக குளித்துவிட்டு வரவேண்டும். பிறகு வீட்டின் கூடத்தின் நடுவே, ஒன்றாக கலந்து வைத்துள்ள உப்பை எடுத்து நாம் அமர்வதற்கு ஏற்றாற்போல் சற்றுப் பெரியதாக வட்டம் போட வேண்டும். பிறகு 18 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கொஞ்சம் கற்பூர துண்டுகளையும், ஒரு தீப்பெட்டியையும் கையில் வைத்துக்கொண்டு, உப்பு வட்டத்திற்கு நடுவே சென்று அமர்ந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒவ்வொரு கற்பூரம் ஏற்றி, ஒவ்வொரு வெற்றிலையையும் அந்த கற்பூரத்தில் காண்பிக்க வேண்டும். பின்னர் வெற்றிலை வதங்கியதும் அதனை நகம் படாமல் விரலால் பிய்த்து நம்மை சுற்றி நான்கு திசைகளிலும் போட்டு விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வெற்றிலையாக செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை ஒரு மணி நேரமாவது உப்பு வட்டத்திற்குள் அமர்ந்து செய்ய வேண்டும். அதன் பின்னர் இறுதியாக நமது வலதுபுறம் உப்பை மட்டும் களைத்து விட்டு, வெளியே வந்து பூஜை அறைக்கு சென்று, அங்கு ஒரு கற்பூரம் ஏற்றி குலதெய்வத்திடம், எனது கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -