நஷ்டத்தை லாபமாக மாற்ற காலண்டருக்கு பின்னாடியே இப்படி ஒரு ஐடியா இருப்பது இத்தனை நாட்களாக தெரியாமல் போச்சே! இது தெரிந்திருந்தால் என்னைக்கோ கோடீஸ்வரராகி இருக்கலாம்.

pillaiyar1
- Advertisement -

இன்றைக்கு முற்றிலும் புதிய, அதி அற்புதம் வாய்ந்த ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். நீங்கள் செய்யும் தொழிலில் நல்ல லாபத்தை பெறுவதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கும். பரிகாரம் என்றால் நிறைய செலவு செய்யப்போவது கிடையாது. ஒரு மண் அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி விளக்கு ஏற்ற போகிறீர்கள் அவ்வளவுதான். ஆனால் இந்த விளக்கை ஏற்றக்கூடிய அந்த குறிப்பிட்ட நேரம் எந்த நேரமாக இருக்க வேண்டும். எந்த கடவுளுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்பதைப் பற்றிய விரிவான பதிவு தான் இது.

நிறைய பேர் தொழில் தொடங்கி விட்டு கஷ்டப்பட்டு வருகிறீர்கள். தொழிலில் இருந்து லாபம் எடுக்கவே முடியவில்லை. இந்த சொந்தத் தொழிலை விட்டு விலகி சென்றால் போதும் என்று நினைப்பவர்கள் கூட இந்த வழிபாட்டை மேற்கொண்டால், செய்யும் தொழிலில், சீக்கிரம் பெரிய தொழில் அதிபராக மாறிவிடலாம்.

- Advertisement -

தொழிலில் நிறைய லாபம் சம்பாதிக்க வழிபாடு:
நாம் எல்லோர் வீட்டிலும் தேதி கிழிக்கக்கூடிய காலண்டர் இருக்கும். அதற்கு பின்பக்கம் கௌரி பஞ்சாங்கம் என்ற ஒரு அட்டவணை இருக்கும். இதுவரை நீங்கள் பார்த்ததில்லை என்றால் இன்று போய் உங்கள் வீட்டு கேலண்டரை திருப்பிப் பாருங்கள். அதில் ஞாயிறு முதல் சனி வரை நாட்களைப் போட்டு ‘லாபம்’ அப்படி என்ற ஒரு நேரத்தையும் குறிப்பிட்டு இருப்பார்கள். தினமும் அந்த லாபம் என்று வரக்கூடிய நேரம் எப்போது என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினசரி அந்த லாபம் நேரத்தில் விநாயகருக்கு விளக்கு ஏற்ற வேண்டும். ஒரு மண் அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி, திரி போட்டு விநாயகருக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, தொழிலில் வரும் தடைகள் விலக வேண்டும். தொழிலில் நிறைய லாபம் கிடைக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். தினம்தோறும் லாபம் என்று வரக்கூடிய அந்த நேரத்தில் இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அந்த விளக்கிற்கு முன்பு ஒரு 12 நிமிடங்கள் அமர்ந்து பிரார்த்தனை வைக்க வேண்டும். மனப்பூர்வமாக அந்த வேண்டுதல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்கு சென்று விளக்கை ஏற்றுவது ரொம்ப ரொம்ப சிறப்பு. கோவிலுக்கு செல்ல முடியாது எங்கள் வீட்டு பக்கத்தில் விநாயகர் சன்னிதானம் இல்லை. இந்த நேரத்தில் கோவில் திறந்து இருக்காது எனும் பட்சத்தில் உங்களுடைய வீட்டிலேயே தாராளமாக இந்த விளக்கை ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே: வியாழக்கிழமையில் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து இதை செய்தால் பிடித்த வேலை நல்ல சம்பளத்துடன் உங்களைத் தேடி வருவது உறுதி.

48 நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் தொழிலில் வெற்றி லாபம் கிடைக்கும். தொழிலில் வெற்றி அடைந்தவர்கள், இந்த விளக்கை ஏற்றினால் மேலும் மேலும் இலாபத்தை பெற்று மேலும் மேலும் உங்களுடைய தொழில் பல மடங்கு உயரலாம். அவ்வளவு அற்புதமான பரிகாரம் இது. நம்பிக்கை இருந்தால் இந்த வழிபாட்டை மேற்கொண்டு பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -