இந்த மஞ்சள் துணியில் 1 ரூபாயை முடிந்து வைத்தால், 1 லட்சம் கிடைக்கும். போதும் போதும் என்ற அளவுக்கு பண வரவை கொடுக்கும் பொன்னான பரிகாரம்.

money2
- Advertisement -

வாழ்க்கைக்கு தேவையான செல்வ வளங்களை சம்பாதித்துக் கொள்ள நாம் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வருகின்றோம். ஆனால் நமக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. எவ்வளவு கிடைத்தாலும் அது போதவில்லை என்ற மனம் தான் நமக்கு இருக்கின்றது. நமக்கு வரக்கூடிய வருமானம் நமக்கு போதுமானதாக உள்ளது‌. இந்த வருமானத்தை வைத்து சந்தோஷமாக வாழலாம் என்ற மன திருப்தியோடு அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கையை நடத்தி சென்றால்தான் முன்னேற்றமடைய வேண்டும். பத்தல பத்தல என்று சொல்லிக்கொண்டே இருந்தால், இருக்கின்ற பொருளும் நம் கையில் இல்லாமலேயே போய்விடும்.

மனதை நிறைவாக வைத்துக் கொண்டு திருப்தியாக இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இது ஒரு சுலபமான பரிகாரம் தான். சொல்லப்போனால் பொன்னான பரிகாரம் என்று சொல்லலாம். இந்த பரிகாரத்திற்கு சிறிய வெள்ளை நிறத்தில் காட்டன் துணி, கொஞ்சம் தொட்டாசிணுங்கி இலை, மஞ்சள் பொடி, பன்னீர், சுத்தமான தண்ணீர், இந்த 5 பொருட்கள் தேவை. இதில் முடிந்து வைக்க 1 ரூபாயை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தொட்டாசிணுங்கி இலை சிறிதளவு எடுத்து அதை உரலிலோ அல்லது மிக்ஸியிலோ போட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். கொஞ்சம் தொட்டாசிணுங்கி இலையை மிக்ஸியில் போட்டு அரைத்தால் கஷ்டம். சிறிய உரலில் போட்டு நன்றாக நசுக்கி கூட எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் நசுக்கி வைத்திருக்கும் தொட்டாசினிங்கி விழுது, மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன், பன்னீர் 2 ஸ்பூன், 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி இதை பரிகார தண்ணீராக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சக்தி வாய்ந்த இந்த தண்ணீரில் எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் துணியை நனைத்து அப்படியே நிழலில் காய வைத்து விடுங்கள். வெள்ளைத் துணி, மஞ்சள் நிறத்தில் மாறி இருக்கும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு மகாலக்ஷ்மியை மனதார நினைத்து கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தை இந்த மஞ்சள் துணியில் வைத்துக் கட்டி, பூஜை அறையில் மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து உங்கள் கஷ்டம் எல்லாம் தீரவேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த முடிச்சை அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.

அவ்வளவு தான். உங்களுடைய வருமானம் நிச்சயம் அதிகரிக்கும். நீங்கள் முடிந்து வைத்திருக்கும் இந்த ஒரு ரூபாய் உங்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்துக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினம், செவ்வாய்க்கிழமை, இப்படி உங்களுக்கு எந்த நாளில் செய்ய முடிந்தாலும் செய்துகொள்ளலாம். ஆனால் பரிகாரத்தை செய்து விட்டு அமைதியாக அமர்ந்து இருந்தால் நிச்சயம் எதுவும் நடக்காது. உங்களுடைய கடின உழைப்பை மூலதனமாக போடுங்கள். அந்த உழைப்புக்கு ஊக்கம் கொடுக்க இந்த பரிகாரம் துணையாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -