இந்த ஒரு படம் உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டால் போதும் அதன் பின்னாலையே நிம்மதி, மகிழ்ச்சி, பணம், அந்தஸ்து எல்லாம் தன்னாலே அதுவாகவே தேடி வந்து விடும்.

narthana Ganapathy hanuman
- Advertisement -

ஒருவர் மற்றவரை பார்க்கும் பொழுது நம்மில் பலரும் இவ்வாறு நினைத்து கொள்வது உண்டு. அவர்களுக்கு என்ன நிம்மதியாக வாழ்கிறார்கள். நல்ல பணத்துடன் வசதியாக இருக்கிறார்கள் என்று நினைப்போம். இப்படித் தான் அவர்களும் மற்றவர்களை நினைப்பார்கள் ஆனால் இந்த நினைப்பானது முற்றிலும் தவறு. எல்லோரும் இதே போல இருப்பது கிடையாது.ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு பிரச்சனையோ பணம் தட்டுப்பாடுடோ குடும்பத்திற்குள் சண்டையோ ஏதேனும் ஒன்று இருக்கும். இதை தான் அந்த காலத்தில் பொதுவாகவே வீட்டிற்கு வீடு வாசப்படி என்ற ஒரே வார்த்தையில் இத்தனை பெரிய விஷயத்தை சொல்லி வைத்தார்கள்.

அப்படியானால் யாருமே மகிழ்ச்சியாக இருக்க முடியாதா? எல்லோரும் நிம்மதியாக வாழவே முடியாதா? பணத்தட்டுக்பாடு இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாதா? இப்படியான கேள்விகள் உங்களுக்குள் எழுதலாம். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் நம்முடைய கர்ம பலனே காரணம் என்பதை எந்த காரணத்தை கொண்டு மறுக்க இயலாது. அதன் தாக்கத்தை குறைத்து நாம் இது போன்ற துன்பத்தில் இருந்து வெளி வந்து நிம்மதியாக வாழ ஒரு சில வழிமுறைகளை நம்முடைய சாஸ்திரங்கள் சொல்லி வைத்திருக்கிறது. அவற்றைப் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் தடையில்லா பண வரவும் கிடைக்க
இந்த முறையை நாம் வழிபாடு என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லது பரிகாரம் என்றும் விடுத்துக் கொள்ளலாம். எப்படி ஆக இருப்பினும் நமக்கு தேவை நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் சரியாக வேண்டும் என்பது தான். வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் இணைந்து வர வேண்டும் எனறால் முதலில் முழு முதல் கடவுளான விநாயகர் நம் வீட்டிற்குள் வர வேண்டும். எல்லோர் வீட்டிலும் விநாயகர் இருக்க தானே செய்கிறார் என்றும் கேட்கலாம் விநாயகர் என்றால் இது நாம் சாதாரணமாக வைத்து வந்ததும் விநாயகர் கிடையாது.

இந்தத் தொல்லைகள் எல்லாம் நீங்கி நிம்மதியாக வாழ நம் வீட்டிற்குள் நர்த்தன கணபதி புகைப்படம் அல்லது சிலை இரண்டில் ஏதாவது ஒன்று கொண்டு வர வேண்டும். விநாயகரே இப்போது பல ரூபங்களில் இருக்கிறார் இதில் விநாயகர் நாட்டியம் ஆடுவது போல இருக்கும் புகைப்படம் தான் நாம் வீட்டில் கொண்டு வந்து வைக்க வேண்டும். இந்த விநாயகர் தெற்கு திசையை பார்த்தவாறு மட்டும் இருக்கக் கூடாது மற்றபடி வேறு எந்த திசையில் வேண்டுமானாலும் வைக்கலாம். இப்படி வைப்பதுடன் நீங்கள் தினமும் பூஜை செய்யும் கற்பூர தீபாராதனை அல்லது வெறும் ஊதுபத்தி போன்றவை காட்டினாலும் கூட போதும் இதை தொடர்ந்து செய்து வர உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிப்பதுடன் நிம்மதியும் மகிழ்ச்சியும் இணைந்து வரும்.

- Advertisement -

அடுத்து செய்ய வேண்டியது ஆஞ்சநேயர் வழிபாடு. இவையெல்லாம் நம் வீட்டிற்கு தடை இன்றி வருவதற்கு முதலில் அந்த தடைகளை உடைக்க வேண்டும். இதனை செய்யக் கூடிய சக்தி வாய்ந்த தெய்வமே அவர் ஆஞ்சநேயரை செவ்வாய், வெள்ளி, சனி போன்ற நாட்களில் வழிபடுவது மிகவும் விசேஷம். இவருடைய புகைப்படம் இருந்தால் அதற்கு முன் பஞ்ச தீபம் அதாவது ஒரு அகலிலே 5 திரிகள் போட்டு ஏற்றுவது போல இருக்கும் அந்த விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மூன்று விரலி மஞ்சள் உங்கள் கையில் இருந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலையே இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். திடீர் பணவரவை ஏற்படுத்தும் அதிசய பரிகாரம்.

இந்த தீபத்தை ஆலயத்தில் சென்று ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே ஏற்றலாம். அதுவும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் ஏற்றி வழிபடலாம். இப்படி வழிபடும் நேரத்தில் ஹனுமன் சாலிசா படிக்க தெரிந்தால் படிக்கலாம் அல்லது இப்போதெல்லாம் அதை அலைபேசியிலே கூட போட்டு கேட்கலாம். ஆனால் இந்த நாட்களில் இந்த தீபம் எரியும் வேளையில் அனுமன் சாலிசா வீட்டில் கேட்க வேண்டும். இதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் மற்றவர்களின் தீய பார்வையினால் ஏற்படும் பிரச்சனைகள் வீட்டில் ஒருவருக்கு மேல் இன்னொருவருக்கு இருக்கும் மனக்கசப்புகள் எல்லாம் நீங்கி நிம்மதியாக வாழ வழி பிறக்கும்.

- Advertisement -