கட்டுக்கட்டாக பணத்தை சேர்க்கும் கருந்துளசி. கருந்துளசி இலைகளுடன் இந்தப் பொருளையும் சேர்த்து வைத்தால், பணத்தை காந்தம் போல அப்படியே ஈர்த்ததுக் கொள்ளலாம்.

karunthulasi
- Advertisement -

கட்டுக்கட்டாக வீட்டு பீரோவில் பணத்தை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நாம் எல்லோருக்கும் இருப்பது தான். ஆனால் என்ன செய்வது, அந்த யோகம் எல்லோருக்கும் வாய்ப்பது கிடையாது. இருந்தாலும் நமக்கு வரக்கூடிய பணம் வீண் விரயம் ஆகாமல் இருந்தாலே போதும். பணம் காசு கட்டுக்கட்டாக தங்கவில்லை என்றாலும், கைக்கு அடக்கமாக நிற்கும். இந்த பணத்தை வீண்விரயம் ஆக விடாமல் தடுக்கக்கூடிய சக்தி என்பது இந்த கருந்துளசிக்கு உண்டு. காரணம் கருந்துளசி ஆக்ரோஷ சக்தியைக் கொண்டது. இந்த கருந்துளசி அருகில் எந்த ஒரு தீய சக்தியாலும் நெருங்கவே முடியாது.

karunthulasi1

அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் கருந்துளசியை பல பரிகார முறைகளுக்கு பயன்படுத்தி வந்தார்கள். அதில் ஒரு சில பரிகார முறைகளை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் வண்டி வாகனம் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தால், அது அடிக்கடி பழுதடைந்து இருந்தால் வீட்டில் கட்டாயமாக வீண் செலவு உண்டாகும். இதுவும் ஒரு வகையில் வீண்விரயம் தான். இந்த விரதத்தை எப்படி தடுப்பது.

- Advertisement -

ஒரு சிறிய நல்ல பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இரண்டு கருந்துளசி இலைகளை வையுங்கள். இந்த இலைகளோடு செம்பில் ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். ஒரு செம்பு நாணயம், செம்பு கம்பி, செம்பு உலோகத்தால் செய்த ஏதோ ஒரு பொருள். செம்பு மோதிரம் இருந்தால் கூட பரவாயில்லை. கருந்துளசி செம்பு இந்த இரண்டு பொருட்களையும் ஒரு பேப்பரில் வைத்து மடித்து, வண்டி வாகனத்தில் வைத்துவிடுங்கள். உங்களுடைய வீட்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதாகி கொண்டிருந்தால் அந்த எலக்ட்ரானிக் பொருளின் மேல் இந்த செம்பு துளசியை ஒன்றாகச் சேர்த்து வைத்துவிட வேண்டும். அவ்வளவு தான். உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய எந்தப் பொருளும் அவ்வளவு எளிதாக பழுதடையாது. வண்டி வாகனங்கள் அடிக்கடி செலவு வைத்துக்கொண்டே இருக்காது. வீண் விரையமும் தானாக குறையும்.

copper coins

ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்கிறீர்கள். அந்த காரியம் வெற்றிகரமாக முடிய வேண்டும் என்றால் இரண்டு கருந்துளசி இலைகளை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து லேசாக நசுக்கி விடுங்கள். அதிலிருந்து வெளியேறும் அந்த சாரை உங்களுடைய நெற்றியில் இட்டுக்கொண்டு, நீங்கள் வெளியே சென்றால் நீங்கள் செல்லும் காரியம் 100% வெற்றி. எல்லாம் உங்கள் வசமாகும்.

- Advertisement -

உங்களுடைய மனது மிகவும் பலவீனமான மனது. இறந்தவர்களின் வீட்டுக்கோ அல்லது தீட்டு வீட்டுக்கு சென்று வந்தால் உங்களுடைய உடம்புக்குள் எதோ ஒன்று புகுந்து ஆட்டிப் படைக்கத் தொடங்கி விடும். அல்லது நல்ல உச்சி வெயிலில் வெளியே சென்று வந்தால் உடல் உபாதைகள் உண்டாகிவிடும். எதிர்மறை ஆற்றலை உங்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்றால் எப்போதுமே உங்களுடைய கையில் இந்த கருந்துளசியை வைத்துக்கொள்ளுங்கள். கருந் துளசியை கையில் வைத்துக் கொண்டு எந்த இடத்திற்கு நீங்கள் சென்றாலும் அந்த எதிர்மறை ஆற்றலின் மூலம் உங்களுடைய உடலுக்கு எந்த ஒரு கோளாறும் ஏற்படாது.

thulasi chedi

இறுதியாக பண விஷயத்திற்கு வருவோம். கருந்துளசியின் வேர், கருந்துளசியின் இலை, ஒரு துண்டு பச்சை கற்பூரம், இந்த மூன்றையும் எடுத்து ஒரு சிறிய மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இதை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். அவ்வளவு தான். பணப்பெட்டியில் இருக்கும் தரித்திரம் நீங்கும். உங்கள் பணப்பெட்டி பணத்தை காந்தம் போல ஈர்த்து அப்படியே தக்கவைத்துக் கொள்ளும்.

- Advertisement -

karunthulasi2

நீங்கள் பணப்பெட்டியில் வைக்கும் பணம் எக்காரணத்தைக் கொண்டும் வீண் விரையம் ஆகாது. மேலும் மேலும் பணத்தை சேர்ப்பதற்கு உண்டான வழி உங்களுக்கு கிடைக்கும். கருந்துளசியின் வேருக்கு அப்படி ஒரு மகிமை உள்ளது. உங்கள் பணப் பெட்டியில் எந்த எதிர்மறை ஆற்றலையும் அது தங்க விடாது.

pachai-karpooram1

பணத்தை சம்பாதிப்பதற்கு நாம் நிறையவே முயற்சி எடுக்கின்றோம். பணத்தை சம்பாதித்தும் விடுகின்றோம். ஆனால் அந்தப் பணம் நம் கையில் நிற்பது கிடையாது. அங்கே தான் பிரச்சனையே தொடங்குகின்றது. வீட்டில் பணம் விரையம் அதற்கான காரணத்தை தடுக்கக்கூடிய அந்த பிரத்தியேகமான சக்தி, ஆக்ரோஷம் இந்த கருந்துளசி இலை, கருந்துளசி வேருக்கும் உள்ளது. ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்.

cash

உங்களுக்கு பலன் அளித்தால் விடாமல் வாழ்நாள் முழுவதும் இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்து கொண்டே இருக்கலாம். பணப் பெட்டியில் வைத்த இந்த முடிச்சை மூன்று மாதத்திற்கு ஒருநாள் மாற்றினால் கூட போதும். ட்ரை பண்ணி பாருங்க. நஷ்டம் அடைவதற்கு இதில் எதுவுமே கிடையாது. பரிகாரம் உங்களுக்கு பலன் அளித்தால் பல லாபங்களைப் பெறுவீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -