விடாமல் ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த பாவம் துரத்தி துரத்தி அடிக்கும். கோபத்தில் கூட இந்த தவறை யாரும் செய்யாதீர்கள்.

Amman-Manthiram
- Advertisement -

மனிதர்கள் அதிகமாக தவறு செய்யக் கூடிய நேரம் என்றால் அது அவர்கள் கோபப்படக் கூடிய நேரம் தான். கோபத்தில் நம்முடைய விரோதத்தை தீர்த்துக்கொள்ள, பழியை தீர்த்துக் கொள்ள, எதை எதையோ செய்து விடுவோம். கஷ்டத்தில் கோபத்தில் சிந்திக்கும்போது நமக்கு அடுத்தவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும். ஆகவே கோபம் தணிந்து நிதானத்தோடு இருக்கும்போது தான் எந்த ஒரு செயலையும் நாம் செய்ய வேண்டும் என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

இன்றைய சூழ்நிலையில் அடுத்தவர்களுடைய குடும்பத்தை கெடுப்பதற்காக நிறைய மனிதர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் மீது எதிர்மறை ஆற்றலை, கெட்ட சக்தியை ஏவி விடுவது. சொத்து தகராறு, சொத்து கொடுக்கவில்லை, கோர்ட் கேஸ் பிரச்சனை என்றால் செய்வினை செய்வது. நம்மை எதிர்த்து நிற்பவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாமல் ஏதாவது ஒரு சூனியம் வைத்து விடுவது.

- Advertisement -

தொழிலில், நம்மைவிட கீழே இருப்பவன், நம்மை விட பல மடங்கு சம்பாதித்து விட்டால், நம் தொழிலை முடக்கம் செய்து விட்டால் என்ன செய்வது. உடனே அவனை செயலிழக்கச் செய்ய செய்வினை வைப்பது அல்லது ஆளையே காலி செய்ய மருந்து வைப்பது. இப்படி எவரொருவர் அடுத்தவர்களை அழிப்பதற்கு இப்படி எதிர்மறை ஆற்றலைத் தூண்டி விடுகிறார்களோ, அவர்களுடைய குடும்பம் ஏழேழு ஜென்மத்திற்கும் கஷ்டப்படும்.

நாம் அடுத்தவர்களுக்காக ஏவிவிடப்பட்ட எதிர்மறை ஆற்றலானது, அவர்களுக்கு ஒரு சில காலமே கெடுதலை செய்யும். அந்த கெடுதல் மீண்டும் செய்வினை வைத்தவர்களுக்கு திரும்பும். இதுதான் நிதர்சனமான உண்மை. எதிர்மறை ஆற்றல் பின்னால் சென்று உங்களுடைய குடும்பத்திற்கு நீங்களே பாவத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்.

- Advertisement -

சரி, ஒரு குடும்பத்திற்கு செய்வினையின் மூலம் பாதிப்பு உள்ளது அந்த பிரச்சினையில் இருந்து வெளிவர என்ன செய்வது. சாப்பாட்டில் அல்லது வேறு ஏதோ ஒரு உணவுப் பொருட்களிலும் மருந்து கலந்து கொடுத்து விட்டார்கள். அந்த மருந்தை உடம்பிலிருந்து எப்படி வெளியேற்றுவது. ஒரு சின்ன பரிகாரம் உங்களுக்காக.

உக்கிரமாக இருக்கக்கூடிய அம்மன் கோவில்களுக்கு வாசலில் திரிசூலம் இருக்கும். திரிசூலத்தில் எலுமிச்சைப்பழம் சொருகி வைத்திருப்பார்கள். அந்த எலுமிச்சம் பழத்தை குருக்களிடம் கேட்டு வீட்டுக்கு எடுத்து வாருங்கள். பூஜை அறையில் வைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பின் அந்த எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து கொஞ்சமாக தண்ணீரில் கரைத்து குடித்து விடுங்கள்.

உங்கள் உடம்பில் இருக்கும் எப்படிப்பட்ட எதிர்வினையாக இருந்தாலும் அது உங்கள் உடம்பை விட்டு வெளியே சென்று விடும். இது ஒரு சிறிய பரிகாரம் தான். இருப்பினும் சக்தி வாய்ந்த பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. தப்பித்தவறி கூட அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பதற்காக நீங்கள் தவறான பாதைக்கு போகாதீங்க. அது உங்களுடைய குடும்பத்திற்கு தான் வினையாக வந்து முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -