இந்த 1 பொருளை கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தேவியிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது உடனே நடக்கும்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

மகாலட்சுமி தேவியிடம் நாம் என்ன கேட்கின்றோமோ இல்லையோ, செல்வ வளத்தை கட்டாயமாக கேட்போம். அதாவது நிறைய பணம், தங்கம், வெள்ளி, இப்படி நிறைய சொத்து சுகம் சேர வேண்டும் என்ற வேண்டுதலை கட்டாயமாக, மனிதர்களாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வைப்பாங்க. அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு, மகாலட்சுமி தாயார் வரங்களை வாரி கொடுக்கின்றார்கள். தாயார் தன் பக்தர்களுக்கு கூடுமானவரை எந்த குறையும் வைப்பதில்லை.

ஆனாலும் சில பேருக்கு கடன் சுமை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. பண கஷ்டம் இருக்கத்தான் செய்கின்றது. வறுமையில் வாடி வதங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். சில பேருக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. இப்படி கஷ்டத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணக் கஷ்டத்தை போக்கிக்கொள்ள மகாலட்சுமி தாயாரிடம் எப்படி வேண்டுதல் வைத்தால் சிக்கிரமே வரங்களைப் பெறலாம் என்ற ஒரு சின்ன சூட்சமத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வெள்ளி காயின் அல்லது வெள்ளி மோதிரம் இதில் ஏதாவது ஒன்று நம்மிடம் கட்டாயம் இருக்கவேண்டும். உங்களுடைய கையில் போட்டுக் கொண்டிருக்கும் வெள்ளி மோதிரம் ஆக இருந்தாலும் சரி தான். அதை இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக மகாலட்சுமியின் திருவுருவப் படம் பதிந்திருக்கும் வெள்ளி நாணயம் ஒரு கிராமில் இருந்தால் கூட மேலும் மேலும் சிறப்பு.

பெருமாள் கோவிலுக்கு செல்கிறீர்கள். அங்கு இருக்கும் தாயார் சன்னிதிக்கு சென்று கண்டிப்பாக தரிசனம் செய்தீர்கள். அப்போது உங்களுடைய இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் செய்து, மகா லட்சுமி தாயாரை வணங்கும் போது உங்களுடைய உள்ளங்கைகளில் இந்த வெள்ளி நாணயம் இருக்க வேண்டும்.

- Advertisement -

வெள்ளி நாணயத்தை வைத்து கொண்டு உங்களுக்கு தேவையான வரங்களை மகாலட்சுமியிடம் கேட்டால் அது உடனடியாக கிடைக்கும். கடன் பிரச்சனை தீர, வருமானம் அதிகரிக்க, நல்ல வேலையில் நல்ல சம்பளம் கிடைக்க, தங்க நகை சேர இப்படி உங்களுக்கு பணத்தின் மூலம் என்னென்ன பிரச்சினை இருக்கின்றதோ அதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்க பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

இதேபோல வெள்ளிக்கிழமை நீங்கள் பூஜை செய்து முடித்துவிட்டு சாமி கும்பிடுவார்கள் அல்லவா. அப்போது மகா லட்சுமி தாயாரை நினைப்பீர்கள் அல்லவா. அப்போது உங்களுடைய கையில் இந்த வெள்ளி நாணயம் இருக்க வேண்டும். இப்படி வெள்ளி நாணயத்தை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் வேண்ட வேண்ட உங்களுடைய நேர்மறை ஆற்றல் அந்த நாணயத்தில் நன்றாக சேர்ந்திருக்கும். (வேண்டுதல் வைக்கும்போது எனக்கு எதற்காக இவ்வளவு கஷ்டம். என் கையில் பணம் காசு இல்லை. எங்கள் வீட்டில் எதுவுமே இல்லை, என்று ‘இல்லை இல்லை’ என்ற புராணத்தை பாட வேண்டாம். எல்லாம் வரும் என்று நேர்மறையாக பிரார்த்தனை செய்ய வேண்டும்.)

இந்த நாணயத்தை அப்படியே கொண்டு போய் பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் நீங்கள் பணம் வைக்கும் பர்சில் வைத்துக் கொள்ளலாம். அது அவரவருடைய விருப்பம் தான். இந்த வெள்ளி நாணயம் இருக்கும் இடத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -