சுகமான வாழ்வும் நலமான ஆரோக்கியமும் கிடைக்க வீட்டில் இந்த சின்ன சின்ன பரிகாரங்களை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள்

drishti
- Advertisement -

நல்ல ஆரோக்யத்துடன் இருந்தவர்கள் திடீரென்று நோய்வாய்ப்பட்டாலும், கோடீஸ்வரராக இருந்தவர்கள் திடீரென்று ஏழ்மை நிலைக்கு வந்தாலும் முதலில் அனைவரும் சொல்லும் காரணம் அவர்களின் இந்த நிலைமைக்கு அவர்களின் மேல் இருக்கும் மற்றவர்களின் கண் திருஷ்டியும், பொறாமையும் தான் என்று. இவ்வாறு ஒருவரை எந்த நிலைமைக்கு வேண்டும் என்றாலும் தள்ளக்கூடிய எதிர்மறை சக்தி மற்றவர் உங்கள் மீது வைக்கும் பொறாமை எண்ணத்திற்கு இருக்கிறது. இந்த பொறாமை எண்ணமே கண்திருஷ்டியாக பார்க்கப்படுகிறது. இந்த கண்திருஷ்டிகளை நம்மிடம் இருந்து அகற்றுவதற்கு வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய எளிய பரிகாரங்களை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

drishti1

பரிகாரம்: 1
முதலில் நமது வீட்டின் நிலை வாசற்படிதான் மிகவும் முக்கியமான இடமாகும். இந்த இடத்திலிருந்துதான் எதிர்மறை சக்திகள் வீட்டினுள் நுழைய ஆரம்பிக்கும். எனவே நமது நிலை வாசற் படியில் சில முக்கிய விஷயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

- Advertisement -

அவ்வாறு பல வீடுகளில் திருஷ்டிக்காக தொங்கவிடப்பட்டிருக்கும் கருப்பு கயிறில் வெள்ளை நிற சங்கு, ஒரு திருஷ்டி படம் மற்றும் வேறு சில பொருட்களும் சேர்ந்திருப்பதை பார்த்திருப்போம். இவை உங்கள் வீட்டினை எவரேனும் பொறாமை எண்ணத்துடன் பார்த்தால் அதனை உள்ளே நுழையாமல் தடுக்க உதவும். இதனை உங்களால் தேடி வாங்க முடியவில்லை என்றாலும் ஒரு நூலை எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு எலுமிச்சை பழம், 3 அல்லது 5 பச்சைமிளகாய், ஒரு கரித்துண்டு இவற்றை மட்டும் சேர்த்து வைத்துக்கொண்டு வீட்டின் வாசலில் கட்டி வைத்தால் போதும். எந்த ஒரு தீய சக்திகளும் உள்ளே நுழையாமல் இருக்கும்.

ganabathi

பரிகாரம்: 2
வீட்டின் தலைவாசலின் வெளிப்புறம் மேலே உள்ள பகுதியில் கண் திருஷ்டி விநாயகர் படத்தை மாட்டி வைப்பது மிகவும் நல்லதாகும். கண் திருஷ்டி விநாயகர் படம் இல்லையென்றாலும் ஏதேனும் ஒரு விநாயகர் படத்தையாவது வாசலில் மாட்டி வைக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதால் நமக்கு தொல்லை கொடுக்கும் எந்த ஒரு தீய சக்தியாக இருந்தாலும் அதனை வீட்டிற்குள் நுழைய விடாமல் வாசலிலேயே அடித்து விரட்டி விடும்.

- Advertisement -

பரிகாரம்: 3
அதுபோல வாசலின் கிழக்குப்பகுதியில் துளசி மாடம் வைத்து தினமும் மாலை வேளையில் விளக்கு மற்றும் சாம்பிராணி வத்தி ஏற்றி வைத்து வழிபட்டு வருவது நமது வீட்டிற்கு அனைத்துவிதமான மங்களங்களையும் கொடுத்து, எப்பொழுதும் மகாலட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தையும் நமக்கு கிடைக்க செய்யும்.

lemon-glass

பரிகாரம்: 4
ஒரு கண்ணாடி குடுவை அல்லது பீங்கான் குடுவையில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்துகொண்டு அந்த குடுவை நிறையும் வரை தண்ணீர் ஊற்றிக்கொண்டு, அதனை உங்கள் வரவேற்பு அறையில் யாரும் பார்த்திராத வண்ணம் ஒரு மூலையில் வைத்து விட வேண்டும். அவ்வாறு நாம் செய்வதால் வீட்டிற்கு வரும் நபர்கள் எந்த ஒரு தீய எண்ணத்துடன் இருந்தாலும் இந்த எலுமிச்சை பழத்திலிருந்து வரும் நேர்மறை சக்திகள் அந்த தீய எண்ணங்களுக்கு எந்தவித பலனும் இல்லாமல் அவற்றை அழித்துவிடும்.

பரிகாரம்: 5
ஒரு கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பிக் கொண்டு அதனை பீரோவின் வலதுபுறம் வைத்துவிடவேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் எப்போதும் பணத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் நிலவிக் கொண்டிருக்கும் எதிர்மறை சக்திகளை அழிக்கும் திறன் இந்த உப்பிற்கு அதிகமாக இருப்பதால் எப்பொழுதும் வீட்டில் நேர்மறை ஆற்றலை நிலவச் செய்யும். எனவே மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் இந்தக் கல்லுப்பை இவ்வாறு வைப்பதன் மூலம் செல்வச் செழிப்புடனான வாழ்க்கையும் நமக்கு கிடைகத்து ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வழி செய்யும்.

- Advertisement -