மழை நேரத்தை விசேஷமாக மாற்ற இப்படி சுடச்சுட சுண்டல் மசாலா செய்து கொடுத்து அசத்துங்கள்

sundal
- Advertisement -

பொதுவாக மழைக்காலம் என்றாலே வீடுகளில் சுட சுட ஏதாவது சாப்பிடுவது வழக்கம். பொதுவாக பஜ்ஜி, போண்டா இது போன்ற ஏதாவது ஒன்றை சமைப்பதை காட்டிலும் உடலுக்கு சத்தும் அதே நேரம் சுவையும் இருக்கும் சுண்டல் மசாலாவை சுட சுட செய்து சாப்பிடுவது மழை நேரத்தில் அமிர்தமாக இருக்கும். அந்தவகையில் சூப்பரான ஒரு சுண்டல் மசாலா ரெசிபியை இங்கு நாம் பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை பட்டாணி – கால் கிலோ, வெங்காயம் – 5, தக்காளி – 4, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், தனி மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, பூண்டு – 4 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
வெள்ளை பட்டாணியை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக் கொண்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, எட்டு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பின் மீது வைத்து, நான்கு அல்லது ஐந்து விசில் வைத்து வேக வைக்க வேண்டும்.

பிறகு நான்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே போல் நான்கு தக்காளியையும் பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி மற்றும் பூண்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு வெங்காய விழுதை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் தக்காளி விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு வேகவைத்த பட்டாணியில் இருக்கும் தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் நன்றாகக் கொதிக்க விட வேண்டும். பின்னர் பட்டாணியையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கொத்தமல்லித்தழையை சேர்த்து கிளறி விட வேண்டும்.

- Advertisement -