இந்த 5 மங்களகரமான இனிப்புகளை சாப்பிட்டு சுப நிகழ்வுகளை தொடங்குங்கள். சுப நிகழ்வு எந்தவித தடைகளும் இல்லாமல் நல்லபடியாக நடந்து முடியும்

happy
- Advertisement -

தேர்வில் வெற்றிபெறுவது, குழந்தை பிறப்பு, பிறந்தநாள் இதுபோன்ற பல இனிமையான தருணங்களில் இனிப்பு வழங்குவது பெரும்பாலும் எல்லோருக்கும் பழக்கமான ஒன்று தான். அதே போல் எந்த ஒரு சுப நிகழ்வுகளையும் தொடங்குவதற்கு முன்னர் இனிப்பு சாப்பிட்டு விட்டு தொடங்கினால் அந்த விஷயம் நன்மையில் முடியும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அவ்வாறு ஏதேனும் ஒரு வேலையை துவங்கும் முன்னர் என்னென்ன இனிப்புகளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

curd-cow

தயிர்:
வடமாநிலங்களில் உள்ளவர்கள் எந்த ஒரு சுப காரியங்களுக்கு செல்லும் முன்னரும் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குழந்தைகள் தேர்வுக்கு செல்லும் முன்னரும், வேலைக்கான நேர்காணலுக்கு செல்லும் பொழுதும் நிச்சயம் இந்த சர்க்கரை கலந்த தயிரை சாப்பிட கொடுத்து தான் அனுப்பி வைப்பார்கள்.

- Advertisement -

தயிர், பாலில் இருந்து கிடைக்கிறது. பால் கோமாதாவின் உருவமான பசுவிடமிருந்து கிடைக்கிறது. கோமாதா எப்பொழுதும் நாம் கேட்கும் வரங்களை கொடுப்பவள். எனவே மங்களகரமான இந்த தயிரில் சர்க்கரையை கலந்து சாப்பிட்டு செல்வதால் செய்யும் காரியம் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நல்லபடியாக நடைபெறும்.

vetrilai-kodi

வெற்றிலை:
வெற்றிலை மிகவும் மங்களகரமான ஒரு பொருள். எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளிலும், ஆன்மீக நிகழ்வுகளிலும் வெற்றிலை இல்லாமல் இருக்காது. வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாகும். வெற்றி என்றால் வெற்றிலை என்றும் சொல்லலாம். தனது பெயரிலேயே வெற்றியை கொண்டிருக்கும் வெற்றிலையை கடவுள்களின் எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் முதலில் இதனை வைத்துதான் வழிபடுவார்கள். அதேபோல் சுப காரியங்களை தொடங்குவதற்கு முன்னரும் வெற்றிலையுடன் சிறிது அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு தொடங்கினால் கணபதியின் அருள் கிடைத்து நீங்கள் செய்யும் காரியம் நிச்சயம் வெற்றியில் முடியும்.

- Advertisement -

லட்டு:
எவ்வளவு இனிப்பு வகைகள் இருந்தாலும் பல இடங்களிலும் பல வேளைகளிலும் லட்டு மட்டுமே முதலிடத்தை பிடிக்கும். விநாயகருக்கும், கிருஷ்ணருக்கும் மிகவும் பிடித்தமான இந்த பூந்தி லட்டு மிகவும் மங்களகரமான ஒன்றாகும். எனவே தான் முக்கியமாக எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், கடைதிறப்பு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் லட்டினை கொடுத்து தங்களது வேலையை தொடங்குவார்கள். பூந்தியால் செய்யப்பட்ட லட்டை பூஜையில் வைத்து வணங்கி அதை சாப்பிட்ட பின்னர் எந்த ஒரு சுப நிகழ்வுகளை தொடங்கினோம் என்றாலும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

madhulai

மாதுளை:
லஷ்மி தேவி வழிபாட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் இந்த மாதுளை பழம் மிகவும் மங்களகரமான ஒன்றாகும். இந்த மாதுளை பழம் மிகவும் அடர்த்தியான தோலினுள் பாதுகாக்கப்பட்டு மிகவும் தூய்மையாக இருக்கிறது. இந்த தூய்மையான மாதுளை பழத்தின் சாப்பிட்டு விட்டு எந்த காரியம் தொடங்கினாலும் அது நன்மையையே விளைவிக்கும்.

vellam

வெல்லம்:
வெளியில் செல்லும் முன்னர் வெல்லம் சாப்பிட்டு சிறிதளவு தண்ணீர் குடித்து செல்வது எந்த காரியத்தையும் உங்களுக்கு நன்மையாக முடித்துக் கொடுக்கும். நமது ஜாதகத்தில் நமக்கான பல விஷயங்கள் குரு பகவானின் அருளினால் தான் நடைபெறுகிறது. எனவே வெல்லம் சாப்பிட்டு விட்டு செல்லும் பொழுது குரு பகவானின் அருள் கிடைத்து செல்லும் காரியம் நன்மையில் முடியும். அதே போல் வெளியில் செல்லும் முன்னர் யாரேனும் தும்பினாலும் அந்த நேரமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு தண்ணீர் குடித்து செல்வது மிகவும் நல்லது.

happy

குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்திற்கும் எந்த ஒரு அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை என்றாலும் காலங்காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த சில விஷயங்கள் ஆகும் இவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் இவற்றை கடைப்பிடித்து பலன் பெறுங்கள்.

- Advertisement -