திறமை அதிகரித்து வருமானம் பெருக பரிகாரம்

perumal pariharam
- Advertisement -

பொன் கிடைத்தாலும் முதல் கிடைக்காது என்று கூறுவார்கள் எந்த ஒரு செயலை நாம் புதன்கிழமை செய்ய ஆரம்பிக்கிறோமோ அந்த செயல் நன்றாக நடைபெறும் என்றும் அதேசமயம் புதன்கிழமை அன்று பெருமாளை வழிபடுவதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று பலரும் கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட புதன்கிழமை அன்று பெருமாளை நினைத்து இந்த எளிமையான பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது நம்முடைய திறமைகள் அனைத்தும் அதிகரித்து அதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புதன் பகவான் என்றாலே அவரை புத்திகாரகன் என்றுதான் கூறுவோம். மந்தமான புத்தி இருப்பவர்கள் புதன்கிழமை அன்று பெருமாளை வழிபடுவதன் மூலம் அவர்கள் புத்தி கூர்மை என்பது அதிகரிக்கும். திறமையை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள் அல்லது தங்களுக்குள் என்ன திறமை இருக்கிறது என்று தெரியவில்லை என்பவர்களும் புதன்கிழமை தோறும் பெருமாளை வழிபட அவர்களுடைய திறமைகள் வெளிப்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் செல்வ செழிப்பிற்கும் அதிபதியாக திகழக்கூடியவர்தான் பெருமாள் என்பதால் புதன்கிழமை என்று பெருமாளை நாம் வழிபடும் பொழுது நமக்கு செல்வ செழிப்பும் அதிகரிக்கும். இப்படி நம்முடைய திறமைகள் அதிகரிப்பதற்கும் செல்வ செழிப்பு உயரவும் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அன்றைய தினம் அஷ்டமி, நவமி, கரி நாள் போன்றவை இருக்கக் கூடாது. புதன்கிழமை அன்று மாலையில் வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடுவோம் அல்லவா? அப்பொழுது ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயம், ஒரு ஸ்பூன் அளவிற்கு பச்சைபயிறு, ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரம் இவை மூன்றையும் போட்டு பெருமாளுக்கு முன்பாக வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு பெருமாளிடம் உங்களுடைய வருமானம் அதிகரிப்பதற்குரிய வழிகளை காட்ட வேண்டும் என்றும் வருமானம் அதிகரிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும். அதனால் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டி முடித்த பிறகு அந்த கிண்ணம் அப்படியே இருக்கட்டும். இரவு 8 மணியிலிருந்து 9 மணி அதாவது புதன் கோரையில் இந்த கிண்ணத்தை அப்படியே எடுத்து உங்களுடைய பணம் சேமித்து வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

அது பீரோவாக இருந்தாலும் சரி அல்லது வேறு ஏதாவது இடமாக இருந்தாலும் சரி. இப்படி நாம் வைத்த மூன்று வாரங்களில் நம்முடைய வருமானம் உயர்வதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். மேலும் நாமும் அந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. மூன்று வாரம் கழித்து இந்த பொருட்களை எடுத்து கால்படாத மண் பாங்கான இடத்தில் போட்டு விட வேண்டும். மறுபடியும் உங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை செய்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இதே போல் செவ்வாய்க்கிழமை அன்றே பச்சை பயிரை ஊறவைத்து அதை புதன்கிழமை அன்று பசு மாட்டிற்கு தானமாக தருவதோ அல்லது காக்கை குருவிகளுக்கு தானமாக தருவதோ புதன் பகவானின் அருளை பரிபூரணமாக பெறச் செய்யும். இதனால் உங்களுடைய திறமைகளும் வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: காரிய தடை விலக பச்சைக் கற்பூர பரிகாரம்

நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் பெருமாளை நினைத்து செய்ய விரைவிலேயே வருமானம் அதிகரிக்கும். விருப்பம் இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -