கெட்ட சக்தி இருக்கும் வீட்டில் இந்த செடியை வைத்தவுடன் வாடி போகும். கெட்ட சக்தியை உடனடியாக காட்டிக் கொடுக்கும் அந்த செடி எது?

shivan
- Advertisement -

வீட்டிற்குள் கெட்ட சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்கு தாந்திரிக ரீதியாக நமக்கு நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சுலுச்சமான சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சீரும் சிறப்புமாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் திடீரென்று பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும். திடீரென அடுத்தடுத்து கெட்டது நடக்க தொடங்கி இருக்கும். சில அசம்பாவித சம்பவங்கள் நடக்கும். பார்த்தால் என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்கவே முடியாது. வீட்டில் அமானுஷ்யமான சில விஷயங்கள் தானாக நடக்கும். நம் கண்ணுக்கு தெரியாமல் யாரோ ஒருவர் வீட்டில் வசிப்பது போல உணர்வு கூட சில பேருக்கு ஏற்படும். சில பேர் தூங்கும் போது தன்னை வந்து யாரோ அழுத்துவது போல கூட உணர்வு தோன்றும். நம்முடைய புத்திக்கு அப்பாற்பட்ட சில விஷயங்கள் என்று சொல்வோம் அல்லவா. அப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடக்கும்.

இதற்கெல்லாம் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கெட்ட சக்தி. அது ஏவல் பில்லி சூனியம் அல்லது ஏதாவது கெட்ட ஆத்மாவின் ஆதிக்கம் என்று கூட இருக்கலாம். உறுதி செய்து விடாதீர்கள். இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு தீர்வை பெற இந்த பரிகாரம் பயன்படும். இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் தும்பை பூ. தும்பை பூ செடி. சிவனுக்கு வில்வ இலை தான் மிகவும் உகந்தது என்பது நம்மில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த தும்பை பூவையும் சிவபெருமானுக்கு வைத்து வழிபடலாம். சிவபெருமான் தன்னுடைய சிரசின் மேலே வைக்கக்கூடிய ஒரே பூ என்றால் அது இந்த தும்பை பூ தான். தும்பை பூவின் மகிமை எல்லா இறைவனின் சிறசிலேயும் அமரும் அளவிற்கு அத்தனை மகத்துவம் வாய்ந்தது.

- Advertisement -

இந்த தும்பைப் பூ செடியிலிருந்து சிறிதளவு கிளையை உடைத்தாலும் சரி அல்லது சிறிய செடியை வேரோடு எடுத்து தும்பை பூச்செடியை ஒரு தொட்டியில் வைத்து உங்கள் வீட்டிற்குள் வைத்தாலும் சரி, வைத்த மார்க்கத்திலேயே உங்கள் வீட்டில் கெட்ட சக்தி உள்ளதா என்பதை கண்டுபிடித்து விடலாம். தும்பை பூ வீட்டிற்குள் வந்தவுடன் வாடினால் உங்கள் வீட்டில் கெட்ட சக்தி இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

கெட்ட சக்தி இருக்கக்கூடிய வீட்டிற்குள் தும்பை பூச்செடி வந்தால் அந்த கெட்ட சக்தியால் உங்களுடைய வீட்டில் இருக்க முடியாமல் தவிக்கும். அதன் மூலம் வீட்டில் சில பொருட்கள் இருக்கின்ற இடத்தை விட்டு கீழே விழுந்து உடைவதற்கு கூட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதை வைத்தே கண்டுபிடித்து விடலாம் உங்களுடைய வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று. அதன் பின்பு அதற்கேற்றவாறு பரிகாரங்களை செய்து பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

நிறைய பேருக்கு இந்த பேய் பிசாசு ஏவல் பில்லி சூனியத்தில் எல்லாம் நம்பிக்கை இருக்காது. நம்பாதவர்களுக்கு இந்த பதிவு கிடையாது. நம்பியவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள குறிப்பு தான் இவை. எதிர்மறை ஆற்றலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதில் மறைந்திருக்கக் கூடிய உண்மைகள் நிச்சயம் புரியும். நம்பிக்கை உள்ளவர்களுக்காக மட்டும்தான் இந்த பதிவு. நம்பிக்கை இல்லாதவர்கள். குறிப்புகளை பின்பற்ற வேண்டாம்.

இந்த செடியை வைத்து பிரச்சனையை கண்டுபிடிக்க தான் முடியுமே தவிர அதற்கான தீர்வை காண முடியாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுடைய வீட்டிலும் ஏதாவது அமானுஷ்யமான விஷயங்கள் நடந்தால் இந்த தும்பை பூச்செடியை வீட்டிற்குள் கொண்டு செல்லுங்கள். உங்கள் சந்தேகத்திற்கான பதில்  ஒரு நொடி பொழுதில் கிடைத்துவிடும் என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -