சுக்கிர வசியம் ஏற்பட தீபம்

sukiran cash
- Advertisement -

ஒரு வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்க வேண்டும் எனில் அங்கு செல்வநிலை நல்ல முறையில் இருக்க வேண்டும். அப்படி செல்வ நிலை உயர வேண்டுமெனில் நியாயமான முறையில் நல்ல வழியில் உழைக்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அத்துடன் சேர்த்து தெய்வ வழிபாடு செய்யும் போது நம்முடைய இந்த முயற்சிக்கு அது பக்க பலமாக இருக்கும்.

இந்த நோக்கத்தின் பிரதிபலிப்பு தான் ஒவ்வொரு வீட்டிலும் காலை மாலை விளக்கு ஏற்றுவது, வெள்ளி செவ்வாய்களில் சிறப்பு பூஜை செய்வது என்பவை எல்லாம். அப்படி செய்யும் பூஜை புனஸ்காரங்களோடு வெள்ளிக்கிழமைகளில் இந்த ஒரு தீபத்தை ஏற்றும் போது அந்த வீட்டில் செல்வநிலை உயரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீப வழிபாடு என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

செல்வ நிலை உயர தீப வழிபாடு

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். ஏனெனில் ஒரு வீட்டில் செல்வநிலை உயர வேண்டும் எனில் சுக்கிரனுடைய அருட்பார்வை நிச்சயமாக தேவை. சுக்கிரனின் அருட்பாவை கிடைப்பதற்காக வெள்ளிக்கிழமையில் நாம் மகாலட்சுமி தாயாரையும் வணங்குகிறோம்.

அப்படி செய்யக் கூடிய இந்த பூஜையில் சுக்கிர பகவானையும் மகாலட்சுமி தாயாரையும் ஒரு சேர மகிழ்விக்க கூடிய இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.அதற்கு நாம் ஏற்றக் கூடிய எண்ணெயில் சில பொருட்களை சேர்த்து ஏற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. முதலில் அந்த எண்ணையை எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த எண்ணையை தீபம் ஏற்ற ஒரு மணி நேரம் முன்பு தயார் செய்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரே ஒரு சிட்டிகை குங்குமப்பூவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இத்துடன் ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, கற்கண்டு இந்த ஆறு பொருட்களையும் சேர்த்து அப்படியே வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை அன்று காலை ஆறிலிருந்து ஏழு மணி வரையான சுக்கிர ஹோரை காலத்தில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக பகல் விளக்கை வைத்து அதில் இந்த எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபம் ஏரியும் நேரத்தில் வீட்டில் கனகதாரா ஸ்தோத்திரம் ஒலிக்க விடுங்கள். இந்த கனகதாரா ஸ்தோத்திரம் வெள்ளிக்கிழமைகளில் ஒரு வீட்டில் எட்டு முறை ஒலிக்கும் போது அத்தனை சௌபாக்கியங்களும் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை நீங்க வாழைப்பழ பரிகாரம்

செல்வத்தை அருளக்கூடிய தெய்வங்களான மகாலட்சுமி தாயாரையும் சுக்கிர பகவானையும் அவர்களுக்கே உரிய வெள்ளிக்கிழமை நாளில் இப்படி வழிபடும் போது வீட்டில் செல்வநிலை பல மடங்கு உயரும் என்று சொல்லப்படுகிறது. இந்த தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -