கணவன் மனைவிக்குள் சண்டையும் வராது. சந்தேகமும் வராது. கணவன் மனைவிக்கு வசியமாக, மனைவி கணவனுக்கு வசியமாக சமையலறையில் இருக்கும் இந்த 2 பொருள் போதும்.

fight
- Advertisement -

கணவன் மனைவிக்குள் வரக்கூடாத ஒரு விஷயம் என்றால் அந்தப் பட்டியலில் முதலில் நிற்பது இந்த சந்தேகம் தான். எந்தக் குடும்பத்தில் சந்தேகம் வந்து விடுகிறதோ அந்த குடும்பத்தில் நிம்மதி வெளியே சென்றுவிடும். சண்டை சச்சரவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வர காரணமாக இருப்பது ஒருவருக்கு மற்றவர் மீது ஏற்படும் சந்தேகம்தான். சந்தேகம் என்றால் அதிலும் இரண்டு வகை சந்தேகங்கள் உள்ளது. ‘கணவர் நம்மை ஆயுசுக்கும் கண்கலங்காமல் வைத்து பார்த்துக் கொள்வாரா, இவரை நம்பி வாழ்க்கையை நிம்மதியாக நடத்திச் செல்லலாமா’ என்ற சந்தேகம் மனைவிக்கு’, ‘மனைவி ஆயுசுக்கும் நம்மை அனுசரித்து நம் குடும்பத்துக்கு ஏற்றவாறு நடந்து கொள்வாளா’ என்ற சந்தேகம் கணவருக்கு.

family fight

ஒருவரை ஒருவர் கைவிடாமல் கடைசி வரைக்கும் ஒற்றுமையாக இருப்போம் என்ற நம்பிக்கை இருவரின் மனதிற்குள்ளும் முதலில் வரவேண்டும். இரண்டாவது வகையான சந்தேகம் இது. சிலருக்கு தங்களுடைய வாழ்க்கை துணையின் மீது நம்பிக்கை இருக்காது. சில வீட்டில் கணவன்மார்கள், மற்ற பெண்களுடன் பேசினால் மனைவிக்கு தேவையற்ற சந்தேகங்கள் எழும். சில வீடுகளில் மனைவிமார்கள் மற்ற ஆண்களுடன் சாதாரணமாக பேசினால் கூட சந்தேகம் எழும். இப்படி உங்களுடைய இல்லத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் எந்த சந்தேகமும் இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்றால் கணவன்மீது மனைவிக்கு ஒரு வசியம் ஏற்பட வேண்டும். மனைவி மீது கணவனுக்கு ஒரு வசியம் ஏற்பட வேண்டும். இதற்கு தாந்திரீக ரீதியாக செய்ய வேண்டிய பரிகாரம் என்ன. இதைப்பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நீங்கள் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். 51 மிளகு எண்ணி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் சுத்தமான கல் உப்பை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது வரவேற்பறையில் அமர்ந்து கொண்டும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு முன்பாக ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

vilaku-milagu-uppu-salt

இப்போது பரிகாரம் செய்ய நீங்கள் தயாராகிக் கொள்ள வேண்டும். முதலில் உங்களது முன்னால் இருக்கும் கல் உப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய கைகளில் எடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் போடவேண்டும். 51 முறை போடவேண்டும். 51 முறை கல் உப்பை எடுத்து டம்ளரில் போடும் போதும், உங்களுடைய கணவரின் பெயரை சொல்லி அவர் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டே போட வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக மிளகு 51. ஒவ்வொரு மிளகாயை எடுத்து கண்ணாடி டம்ளரில் இருக்கும் தண்ணீரில் போட வேண்டும். உப்பை முதலில் போட்டீர்கள் அல்லவா அதை தண்ணீரில் மிளகையும் போடுங்கள். மிளகையும் உங்கள் கணவரின் பெயரை சொல்லி, அவர் எப்போதும் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று சொல்லி, அந்த தண்ணீரில் போட வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் கண்ணாடி டம்ளருக்கு போடுவதற்கு முன்பு உங்களுடைய குலதெய்வத்தை ஒருமுறை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

uppu

கல் உப்பும் மிளகும் நிறையவே வசிய தன்மை கொண்டது. நாம் என்ன சொல்லி இந்த பரிகாரத்தை செய்கின்றோமோ, அதை அப்படியே நமக்கு வசியப்படுத்தி தரும் சக்தி கொண்டது தான் இந்த இரண்டு பொருட்களும். உங்களுடைய கணவருக்கும் உங்களுக்கும் குறிப்பிட்ட இந்த பிரச்சனையின் மூலம் தான் சண்டை வருகிறது என்றால் அந்த குறிப்பிட்ட பிரச்சனை சரியாக வேண்டும் என்று சொல்லி நீங்கள் 51 முறை கல் உப்பையும் மிளகையும் தண்ணீரில் போட வேண்டும். நீங்கள் என்ன வார்த்தையை சொல்லி இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீரில் போடுகிறீர்கள் அந்த வார்த்தை அப்படியே பலிதமாகும்.

vilakku-pray

சில வீடுகளில் மனைவியின் மூலம் பிரச்சினை இருக்கின்றது என்றால் மனைவியின் பெயரைச் சொல்லி கணவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பரிகாரம் செய்து முடித்தவுடன் டம்ளரில் இருக்கும் தண்ணீர் கல்லுப்பு மிளகு இவை அனைத்தையும் ஓடுகின்ற தண்ணீரில் ஊற்றி விட வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் ஏரி குளம் ஆறு இல்லை என்றால், மனிதர்கள் கால் படாத இடத்தில் கொண்டுபோய் இதை கொட்டி விட்டு வந்து விடுங்கள். அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை உங்களுக்கு எந்த நேரம் சவுகர்யமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம். நாள் கிழமை எல்லாம் கணக்கு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த பரிகாரத்தை செய்த பின்பும் நிச்சயமாக கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வருவது குறைய தொடங்கும்.

- Advertisement -