கடன் தீர துவரம் பருப்பு பரிகாரம்

murugan thuvarai
- Advertisement -

கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவானே. அப்படிப்பட்ட செவ்வாய் பகவானுக்குரிய தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். ஆகையால் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் என்பதால் முருகப்பெருமான் வழிபாட்டிற்கு மிகவும் சிறந்த தினமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த தினத்தில் கடன் தீருவதற்கு எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செவ்வாய் பகவானுக்குரிய கிழமையாக திகழக்கூடியது செவ்வாய்க்கிழமை. முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமை தோறும் யார் ஒருவர் வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். சொந்தமாக வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். திருமண தடை விலகும் என்று பல பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் கடன் பிரச்சினை தீர்வதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக செவ்வாய்க்கிழமை என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையாக கருதப்படுகிறது. அதோடு இன்றைய தினம் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் முருகன் வழிபாடு என்பது இன்றைய தினத்தில் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும். அப்படி வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் எளிமையான சில தாந்திரீக பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினைகள் தீரும். அந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு அரை கிலோ துவரம் பருப்பு இருந்தால் போதும். அரை கிலோ வாங்க முடியாது என்பவர்கள் கால் கிலோவாவது வாங்கிக் கொள்ளுங்கள். துவரம் பருப்பு என்பது செவ்வாய் பகவானுக்குரிய தானியமாக கருதப்படுகிறது. கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றால் செவ்வாய் பகவானின் அருள் வேண்டும் என்பதால் செவ்வாய் பகவானுக்குரிய தானியத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்கிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக தான் செய்ய வேண்டும். துவரம் பருப்பை ஒரு சிவப்பு நிற துணியில் மூட்டையாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு படுக்கச் செல்வதற்கு முன்பாக முகம் கை கால்களை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். மாதவிடாய் காலங்களில் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது.

இப்பொழுது உங்கள் இரண்டு கைகளிலும் துவரம் பருப்பு மூட்டையை வைத்துக் கொண்டு முருகப் பெருமானை மனதார நினைத்து நீங்கள் யாரிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறீர்களோ அவர்களின் பெயரை கூறி அவர்களிடம் வாங்கிய பணத்தை திரும்பத் தர வேண்டும் என்று மனதார வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து முடித்த பிறகு அந்த மூட்டையை உங்களுடைய தலையணைக்கு கீழ் வைத்து இரவு படுத்து உறங்க வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு இந்த மூட்டையை எடுத்துக்கொண்டு போய் ஆதரவற்ற நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கோ அல்லது ஏழ்மையில் வாடுபவர்களுக்கோ தானமாக தரவேண்டும். அரை கிலோ கால் கிலோ என்று வாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை வைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

அந்த துவரம் பருப்பை மறுநாள் பறவைகளுக்கோ அல்லது மாட்டிற்கோ தானமாக தந்துவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடன் வாங்கியதால் ஏற்பட்ட கர்ம வினைகள் அனைத்தும் நீங்கி கடன் விரைவிலேயே அடையும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கனவு நினைவாக பிரதோஷ வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை முருகப்பெருமான் மீது முழு நம்பிக்கை வைத்து செய்பவர்களுக்கு கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும்.

- Advertisement -