வட்டி கட்டியே வாழ்க்கையை தொலைத்தவர்கள் காலபைரவரை நினைத்து 27 முந்திரியை வைத்து இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும். கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

kala bhairavar cash mundiri
- Advertisement -

ஒரு மனிதனை வாழவே விடாமல் பாடாய்படுத்தும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இந்த கடன் பிரச்சனையை சொல்லலாம். ஒருவரிடம் கை நீட்டி கடன் வாங்கி விட்டால் போதும் அவர்களை பார்க்கும் போது நாம் ஏதோ ஒரு வகையில் சங்கடத்திற்கு உள்ளாகி விடுவோம். நாம் சரியாக வட்டியும் பணமும் தந்தாலுமே கூட இப்படி ஒரு மனநிலைக்கு ஆளாகி விடுவோம். எப்பேர்பட்ட மனிதனையும் நிலைகுலையச் செய்யும் ஒரு பிரச்சனை என்றால் அதுவும் இந்த கடன் தான். இப்படியான கடன் தொல்லையிலிருந்து மீண்டு வெளி வர ஒரு சில பரிகாரங்களை ஆன்மீகம் நமக்கு தந்திருக்கிறது. அதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர பரிகாரம்
இந்த பரிகாரத்தை நாம் கால பைரவருக்கு தான் செய்ய வேண்டும். கால பைரவர் சிவனின் ரூபமாகவே கருதப்படுகிறார். ஆகையால் தான் மனிதன் தன்னுடைய தீர்க்க முடியாத பிரச்சனைகள் துவண்டு விழும் போதெல்லாம் அதை தீர்க்கும் கடவுள்களில் முக்கியமானவராக கால பைரவர் இருக்கிறார். அதிலும் இது போன்ற கடன் பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கக்கூடிய கடவுளாகவும் இவர் இருக்கிறார். ஒருவர் வாழ்க்கையில் கடனால் பெரிதும் அவதிப்படுகிறார் எனில் அது அவருடைய கர்ம வினையின் பலனாகவே கருதப்படுகிறது. ஆகையால் தான் கடன் பிரச்சனை தீர கால பைரவரை சரணடைவது சிறந்த வழியாக சொல்லப்படுகிறது. இப்போது இந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையானது 27 முந்திரி. முந்திரி நல்ல தரமானதாக இருக்க வேண்டும் உடைந்ததாகவோ அல்லது பாதி முந்திரியாகவோ இருல்லாமல் முழு முந்திரி ஆக வாங்கிக் கொள்ள வேண்டும். அடுத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புணுகை வாங்கி கொள்ளுங்கள். இத்துடன் வீட்டில் நெய்வேத்தியமாக மிளகு சேர்த்த வெண்பொங்கலை செய்து கொடுங்கள். மிளகு கடனை தீர்க்க செய்யப்படும் பரிகாரங்களில் முக்கியமானதாக உள்ளது. அதே போல இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம்.

இந்த பரிகாரத்தை நீங்கள் வீட்டிலும் செய்யலாம் அல்லது ஆலயத்திலும் செய்யலாம். ஒரு சிலர் வீட்டில் காலபைரவர் படத்தை வைத்து வழிபடுவதில் சிக்கல் இருக்கலாம். அப்படியானவர்கள் இந்த வழிபாட்டை ஆலயத்தில் செய்து கொள்ளுங்கள் மற்றவர்கள் வீட்டிலே செய்து கொள்ளலாம் வீட்டில் காலபைரவர் படத்திற்கு புணுகுவை கொண்டு பொட்டு வைத்த பிறகு அதன் மேல் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விடுங்கள். அதே போல் காலபைரவருக்கு சிகப்பு மலர்கள் பிடிக்கும் செவ்வரளி, செம்பருத்தி போன்ற மலர்களை சூட்டி விடுங்கள். அதேபோல் நெய்வேத்தியத்தையும் செய்து படைத்த பிறகு கால பைரவருக்கு முன்பாக தீபத்தை ஏற்றி விடுங்கள். இதற்கு நெய் தீபம் தான் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இப்போது காலபைரவர் படத்திற்கு முன்பாக அமர்ந்து கொண்டு விளக்கை பார்த்து உங்கள் மனதில் உள்ள பிரச்சனைகள் கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த முந்திரிகளை மாலையாக தொடுக்க வேண்டும். கொடுத்த இந்த மாலையை பைரவர் படத்தில் போட்ட பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பரிகாரத்தை முடித்து விடுங்கள். அதன் பிறகு புணுகை நீங்கள் நெற்றியில் வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். நெய்வேத்தியத்தை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக உண்டு விடுங்கள் முந்திரியை மட்டும் நீங்கள் உண்ணாமல் பறவைகளுக்கு உணவாக வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:

இதே வழிபாட்டை நீங்கள் ஆலயத்தில் செய்யும் பொழுது பைரவரிடம் வைத்து வணங்கிய புணுகை மட்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விடுங்கள், மற்றவற்றை கோவில் இல்லை கொடுத்து விடுங்கள். இந்தபரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பொழுது இது வரையில் நீங்கள் தீர்க்கவே முடியாது என்று திணறிய கடன் தொல்லை கூட எளிதில் தீர்ந்து விடும். அத்தகைய சக்தி வாய்ந்த பரிகாரமாக இது கருதப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து கால பைரவரின் அருள் ஆசையோடு கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -