கடன் தீர செவ்வாய்க்கிழமை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

sivan1
- Advertisement -

கழுதை பிடிக்கும் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்காக எத்தனையோ பரிகாரங்களை தேடி தேடி, ஓடி ஓடி செய்கின்றோம். ஆனால் பலன் இல்லை. கைநீட்டி கடன் வாங்கியது போக, பரிகாரம் செய்வதற்கு வேற கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. மேலும் மேலும் கடன் தான் உயர்கிறது. இந்த கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது.

செவ்வாய்க்கிழமை சிவன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறைய தொடங்கும். கடனை குறைக்க போகும் அந்த மந்திரம் என்ன, சிவன் கோவிலுக்கு சென்று அந்த மந்திரத்தை எப்படி உச்சரிப்பது ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கடன் தீர்க்கும் சிவ மந்திரம்

சிவன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லும்போது வில்வ இலைகளை வாங்கி செல்லுங்கள். கூடவே வாசம் நிறைந்த ஏதாவது ஒரு பூ மல்லி, முல்லை எந்த பூ வாக இருந்தாலும் வாங்கிக்கோங்க. அதை சிவபெருமானுக்கு கொடுத்து உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

1 கிலோ துவரம் பருப்பு, அல்லது அதற்கு மேல் உங்களால் எவ்வளவு துவரம் பருப்பு வாங்க முடியுமோ அதை வாங்கி சிவன் கோவில் அர்ச்சகருக்கு தானமாக கொடுத்து விடுங்கள். பிறகு சிவன் கோவிலிலேயே ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். முதுகு தண்டுவடம் நேராக இருக்கட்டும் ‘ஓம் ருண முக்தியேஸ்வராய நமஹ’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். 108 முறை க்கும் மேல் உச்சரித்தாலும் தவறு கிடையாது.

- Advertisement -

குறைந்த பட்சம் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். செவ்வாய்க்கிழமை சிவன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்க கூடிய நபருக்கு நிச்சயம் கடன் தொல்லை இருக்காது. மந்திர வார்த்தைகள் வாயில் இருந்து வரக்கூடாது. ஆழ் மனதில் இருந்து வரவேண்டும். உண்மையான நம்பிக்கையோடு சொல்ல வேண்டும். செவ்வாய்க்கிழமை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை சிவன் கோவிலில் அமர்ந்து சொல்லலாம்.

எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அதை அடைக்க கூடிய நேரம் காலத்தை அந்த சிவபெருமான் உங்களுக்கு கொடுத்துவிடுவார். ருணம் என்பது நோயை குறிக்க கூடிய வார்த்தை, கடனையும் குறிக்கக்கூடிய வார்த்தை. நோயில்லாமல், கடன் இல்லாமல் வாழ்வதற்கு இந்த எளிமையான பரிகாரம் நிச்சயம் எல்லோருக்கும் பயனுள்ளபடி அமையும்.

- Advertisement -

ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தொடர்ந்து உங்களால் எத்தனை செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை செய்ய முடியுமோ செய்யுங்கள். துவரம் பருப்பை ஒரு வாரம் அர்ச்சகருக்கு தானமாக கொடுங்கள். துவரம் பருப்பில் ஏதாவது பலகாரம் செய்ய முடியும் என்றால் அதை பிரசாதமாக செய்து சிவன் கோவிலில் வைத்து, நெய்வேதியம் செய்துவிட்டு, அங்கு வரும் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: குருவின் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

அதுவும் நன்மையை தரக்கூடிய விஷயம் தான். தொடர்ந்து 5 வாரம் செவ்வாய்க்கிழமை இதை நீங்கள் செய்யும் போதே உங்கள் பண பிரச்சனை, கடன் பிரச்சனை குறைவதை உணருவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றுங்கள் சிவனின் ஆசிர்வாதத்தை பெறுங்கள்.

- Advertisement -